பாவை ஆடிய துறையும், பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும், மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங், கள்ளக்
கருங்கண் போன்றகாவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே! தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.