பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன் பொருகடல் முகந்து கருமுகிற் கணம்,நற் படஅர வொடுங்க மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்திழி அருவி குணகடல் மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் உடுத்த மணிநீர் வலஞ்சுழி அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.