பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை
ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?