திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்

குரலிசை
காணொளி