திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,
அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,
திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,
திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.

பொருள்

குரலிசை
காணொளி