திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

மறி ஆரும் கைத்தலத்தீர்! மங்கை பாகம் ஆகச் சேர்ந்து
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்!
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில்,
நெறி ஆரும் கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

பொருள்

குரலிசை
காணொளி