புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக
உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த
நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார்,
நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு
கொச்சைவயமே.