வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது
உண்ட மாலும், இகலி,
"கண்டிட ஒண்ணும்" என்று கிளறி, பறந்தும், அறியாத
சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
கொச்சைவயமே.