திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி
அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த,
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி