திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து
இலங்க,
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்;
வெண்பொடிப்பூசி
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி