இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில்
உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ,
முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.