திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: செவ்வழி

முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கைக்
கோன்
அழுது இரங்க, சிரம் உரம் ஒடுங்க(வ்) அடர்த்து, அங்கு
அவன்
தொழுது இரங்கத் துயர் தீர்த்து, உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே.

பொருள்

குரலிசை
காணொளி