பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள் தனை
மேவினானும், வியந்து ஏத்த, நீண்டு ஆர் அழல் ஆய்
நிறைந்து
ஓவி, அங்கே அவர்க்கு அருள் புரிந்த(வ்) ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மடமங்கையர் சேர் கடல் காழியே.