காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு
எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி
சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம்
ஆளுமவரே.