தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்;
நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள்
மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை
பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல்
உலகமே.