திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்;
நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள்
மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை
பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல்
உலகமே.

பொருள்

குரலிசை
காணொளி