பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல்
உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய
தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும்
இல ஆய்,
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே