கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக்
காய்ந்தவர் தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர்
ஆகி, நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம்
மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும்
செயலே!