“பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும்
ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன்
அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான்” என,
வினை கெடுமே.