திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள்
இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

பொருள்

குரலிசை
காணொளி