படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு
ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்;
உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)
அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம்
அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;
கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.