திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை
வணங்கச் சேவடியை வைத்தார் போலும்;
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி,
வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்;
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்;
எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது
மேவிய ஈசனாரே.