கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம்
கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்;
தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி
நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்
சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர்; எமை ஆள்வர்; என் உள்
நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.