திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்;
இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்;
தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்;
சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்;
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்;
அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்;
தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

பொருள்

குரலிசை
காணொளி