திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்;
மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்;
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்;
இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்;
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்;
கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்;
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

பொருள்

குரலிசை
காணொளி