திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை;
விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி,
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை;
ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை;
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை,
அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை-
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி