திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை,
ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்
கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை,
புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி