ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று
ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு
இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர்
உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி
ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்-
தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்;
தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!.