திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க
சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள்
ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம்
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன்
வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை,
வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள்
அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும்
ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.

பொருள்

குரலிசை
காணொளி