திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே!
“பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா!
தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு
ஆரூர்த் திருமூலட்டானா!” என்றும்,
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி
நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று,
ஏசற்று நின்று, “இமையோர் ஏறே!” என்றும்,
“எம்பெருமான்!” என்று என்றே ஏத்தா நில்லே!.

பொருள்

குரலிசை
காணொளி