பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே;
பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;
உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி
முதல்வனாய் நின்றாய், நீயே;
கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே;
கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.