திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;
ஏகம்பம் மேய இறைவன், நீயே;
வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே;
வாரா உலகு அருள வல்லாய், நீயே;
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே;
தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

பொருள்

குரலிசை
காணொளி