புகழும் பெருமையாய் நீயே என்றும், பூங் கயிலை
மேவினாய் நீயே என்றும்,
இகழும் தலை ஏந்தி நீயே என்றும், இராமேச்சுரத்து
இன்பன் நீயே என்றும்,
அகழும் மதில் உடையாய் நீயே என்றும், ஆலவாய்
மேவினாய் நீயே என்றும்,
திகழும் மதிசூடி நீயே என்றும், நின்ற நெய்த்தானா!
என் நெஞ்சு உளாயே.