தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம்
கூட்டைப் பொருள் என்று மிக உன்னி, “மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம்” என்று பேசும்
ஆங்காரம் தவிர், நெஞ்சே! அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற, அன்று,
முடுகிய வெஞ்சிலை வளைத்து, செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன் நெய்த்தானம் என்று
நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.