திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து,
ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக
நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால்
வேதத்து அப்பால் நின்ற
பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற
நாள் போக்கினேனே!.

பொருள்

குரலிசை
காணொளி