திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

விடிவதுமே வெண்நீற்றை மெய்யில் பூசி, வெளுத்து
அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
“செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய்!” என்றும்,
“செல் கதிக்கு வழி காட்டும் சிவனே!” என்றும்,
“துடி அனைய இடை மடவாள் பங்கா!” என்றும்,
“சுடலை தனில் நடம் ஆடும் சோதீ!” என்றும்,
கடிமலர் தூய், தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

பொருள்

குரலிசை
காணொளி