திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி, திகையாதே,
“சிவாய நம” என்னும் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்-கடல்
நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
“பருதி தனைப் பல் பறித்த பாவநாசா! பரஞ்சுடரே!”
என்று என்று பரவி, நாளும்
கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.