“பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலால் உடம்பை நிலாசும்” என்று
பசியினால் மீதூரப்பட்டே, ஈட்டி, பலர்க்கு உதவல்
அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு, வீழா முன்னம்,
வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லி,
கசிவினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.