திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள்
மூன்றும் பொடி ஆக எய்தானை; புனிதன் தன்னை;
வார்(த்)த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை;
மறிகடலுள் நஞ்சு உண்டு, வானோர் அச்சம்
தீர்த்தானை; தென் திசைக்கே காமன் செல்ல,
சிறிது அளவில் அவன் உடலம் பொடியா அங்கே
பார்த்தானை; பள்ளியின் முக்கூடலானை;
பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி