மெய்த்தவத்தை; வேதத்தை; வேதவித்தை;
விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை;
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே, ஏற வாங்கி,
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானை;
புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை;
சாராதே சால நாள் போக்கினேனே!.