அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு இல் சிந்தை ஆரம்பக்
குண்டரோடு, அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதி இலியேன்
வாழ்வு எல்லாம் வாளா; மண்மேல்
பிறந்த நாள் நாள் அல்ல, வாளா; ஈசன் பேர் பிதற்றிச் சீர்
அடிமைத் திறத்து உள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை,
செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.