திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு
செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி
அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

பொருள்

குரலிசை
காணொளி