புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும்
போற்றி இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த!
சொல்லாய்
சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள்
செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?