பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் தரு என நல்கும் சதா சிவன் தானே.
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் நால் ஆன ஒன்று மரு உரு நண்ணல் ஆல் பால் ஆம் இவை ஆம் பர சிவன் தானே.
தேவர் பிரானைத் திசை முக நாதனை நால்வர் பிரானை நடு உற்ற நந்தியை ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே.
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற காண் தகையானொடும் கன்னி உணரினும் மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே.
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் நீதியுள் மா தெய்வம் நின் மலன் எம் இறை பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே.
சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே சுத்த சிவ பதம் தோயாத தூ ஒளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம் ஒத்தவும் ஆம் ஈசன் தான் ஆன உண்மையே.
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.
எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானம் ஆம் சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.
சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடை ஊட்டிச் சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்துச் சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே.