பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே.
மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்து உளே நின்று முத்தி தந்தானே.
ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆமே.
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே.
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.
உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம் பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம் திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே.
அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச் சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி புவன் இவன் போவது பொய் கண்ட போதே.
கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறு இந்தப் பார் அகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே.