பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / அதி சூக்கும பஞ்சாக்கரம்
வ.எண் பாடல்
1

சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கிச்
சிவாய சிவ சிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே.

2

செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம்
அஞ்சணவும் முறை ஏறி வழிக் கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலை பெறல் ஆகுமே.

3

அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்ட அவ் எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அரும் கலம் ஆமே.

4

நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாய் ஓட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாய் ஓட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாய் ஓட்டு மந்திரம் நாமறியோம் அன்றே.

5

பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே.