பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / இலிங்க புராணம்
வ.எண் பாடல்
1

அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகித்
திடமார் தவம் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.

2

திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர் உற வேண்டா
பரி உடை யாளர்க்குப் பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே.

3

ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.

4

தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள் செய்தான் நின் மலன் தானே.

5

உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே.

6

ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று
நாடி இறைவா நம என்று கும்பிட
ஈடு இல் புகழோன் எழுக என்றானே.