திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள் செய்தான் நின் மலன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி