பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம் தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே.
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும் இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு அவ்வாறு அறிவார்க்கு அவ் ஆனந்தம் ஆமே.
மாறி வரும் இருபான் மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங்கலை இடை ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
உதித்து வலத்து இடம் போகின்ற போது அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் உதித்தது வே மிக ஓடிடும் ஆகில் உதித்த இவ் ராசி உணர்ந்து கொள் உற்றே.
நடுவு நில்லாமல் இடம் வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறு சென்றின் பணி சேர முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே.
ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது வாயு விதமும் பதினாறு உள வலி போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம் ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே.