பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / சன்மார்க்கம்
வ.எண் பாடல்
1

சாற்றும் சன்மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவத்
தோற்றங்கள் ஆன சுருதிச் சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே.

2

சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.

3

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தரு முத்திச் சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே.

4

தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியா தவர் தீரார் பிறப்பே.

5

தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அதாம் மொழிப் பால் முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனு பூதியில் இன்பமும்
தான் அவனாய் உறல் ஆன சன் மார்க்கமே.

6

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத் தார்க்கும் இடத் தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தெரிசனம்
எம் மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

7

சன் மார்க்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்க்கம் விட்ட துரியத் துரிசு அற்றார்
சன் மார்க்கம் தான் ஆகும் சன்மார்க்கமே.

8

சன் மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்குப்
பின் மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன் மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.

9

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முஇன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே.

10

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசி யாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரு போதயத்து உற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே.

11

மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன் மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறிவைகா தோர்
மார்க்கம் சன் மார்க்கம் ஆம் சித்த யோகமே.