திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே!
திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;
புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,
குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!

பொருள்

குரலிசை
காணொளி